உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் மீது பஸ் மோதல் அண்ணன், தம்பி பலி

டூவீலர் மீது பஸ் மோதல் அண்ணன், தம்பி பலி

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேசெங்குறிச்சி கம்பிளியம்பட்டி அருகே பொத்தகணவாய்பட்டியை சேர்ந்தகூலித் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மகன் வெள்ளைச்சாமி 21; வேடசந்துார் நுாற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். 4வது மகன் வள்ளியப்பன் 13; மார்க்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். இவர்கள் இருவரும் நேற்று காலை 6:30 மணிக்கு கம்பிளியம்பட்டியில் இருந்து பொத்தகணவாய்பட்டிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை ) சென்றனர்.மணக்காட்டூர் ரோட்டில் இவர்கள் சென்ற போது எதிரே செந்துறையில் இருந்து பழநி வந்த தனியார் பஸ் டூவீலரில் மோதியதில் அண்ணன், தம்பி பலியாயினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ