மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்.........
30-Sep-2024
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுடுதண்ணீர் கொட்டியதில் ஒரு வயது குழந்தை பலியானது.-மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே சால்வார்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தன. அக்.10ல் பொன்னம்மாள் அனன்யா என்ற ஒரு வயது குழந்தையுடன் நத்தம் பரளி- தேத்தாம்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே விறகு அடுப்பு வைத்து சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அனன்யா மீது சுடுதண்ணீர் கொட்டியது. இதில் காயமடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டட நிலையில் நேற்று இறந்தது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.
30-Sep-2024