காங்., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: வங்கிகளில் நகைக்கடன் பெற 9 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை கண்டித்தும், கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலை ரோட்டில் பாரத் ஸ்டேட் வங்கி முன்பு நடந்த இதற்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி, மாவட்ட துணை தலைவர் காஜாமைதீன், பொதுச்செயலாளர் வேங்கைராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வரதராஜன், பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி, கவுன்சிலர் பாரதி, மகிளா காங்கிரஸ் தலைவர் சுமதி கலந்துகொண்டனர்.