விபத்தில் இறப்பு திண்டுக்கல்லில் மறியல்
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பை சேர்ந்தவர் திருமுருகன் 30. இவருக்கு மனைவி பவித்ரா, இரு மகள்கள் உள்ளனர். மசாலா ஏஜென்சி நடத்தி வந்த இவர் ஒட்டன்சத்திரம் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு டூவீலரில் ஊர் திரும்பினார். அவ்வழியாக வந்த மினிவேன் மோதியதில் திருமுருகன் இறந்தார். உடலை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்த அவரின் உறவினர்கள் உயிர்பலிக்கு காரணமானவர்களை கைதுசெய்ய வலியுறுத்தி பழநி ரோட்டில் மறியல் செய்தனர். இதன்பின் திண்டுக்கல் திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். போலீசார் சமாதானம் செய்தனர். விபத்து ஏற்படுத்தியவரை அடையாளம் கண்டு கைதுசெய்வதாக உறுதியளிக்க கலைந்து சென்றனர்.