மேலும் செய்திகள்
பைகள் தயாரிப்பு பணிமனை
29-Nov-2024
திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் மீன் சுழற்சி பணிமனை நடந்தது. பயன்படாத குப்பைகளிலிருந்து சுழற்சி செய்து உபயோகமான பொருட்களாக மாற்றும் பயிற்சி மாணவர்களுக்கு தரப்பட்டது. காலை ஆசிரியை சண்முகமலர் பயிற்சி கொடுத்தார். ஆசிரியர்கள் கார்த்தி, அருள்ஜெயந்து, நர்மதா, ஜெயந்தி கலந்து கொண்டனர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். அந்தோணி சுரேஷ்தாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் மகேஸ்வரன் செய்திருந்தார்.
29-Nov-2024