மேலும் செய்திகள்
தொடர் விடுமுறையால் பழநியில் பக்தர்கள் கூட்டம்
04-Nov-2024
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.தடையை மீறி பக்தர்கள் சிலர் அலைபேசிகளை எடுத்து வந்திருந்தனர். தரிசனம் செய்ய பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. கூட்டத்தில் வழி தவறியவர்களை கண்டறிய ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
04-Nov-2024