மேலும் செய்திகள்
பக்தர்கள் கூட்டம்
11-Aug-2025
பழநி : பழநி முருகன் கோயில் வந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். ரோப்கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். நடந்து சென்ற பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் சென்றனர். கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.
11-Aug-2025