மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
நிலக்கோட்டை: நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடந்தது. எத்திலோடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் தவராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.பி.டி.ஓ., குமரவேலு வேலை நாட்கள் முழுமையாக வழங்கப்படும் என்றும், வருகிற ஆண்டுகளில் 125 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூற கலைந்து சென்றனர்.