| ADDED : மார் 17, 2024 05:57 AM
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்குவந்துள்ள நிலையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்ததுஎஸ்.பி., பிரதீப், ஊரக முகமை திட்ட இயக்குநர் திலகவதி, டி.ஆர்.ஓ., சேக்முகையதீன் ,தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இதில் கலெக்டர் பேசியதாவது: அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை அகற்றிடவும் , பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளில் உள்ள கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள்,கொடிகள் ஆகியவைற்றை மறைக்க வேண்டும். அரசு கட்டடங்களில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ., எம்.பி.,க்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்பட வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை திரும்ப பெற வேண்டும். பறக்கும்படை , வீடியோ கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் , அவர்களுக்குரிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அரசு கட்டடங்கள்,சுவர்களில் உள்ள அரசியல் கட்சியனர் தொடர்பான சின்னங்கள், வாசகங்களை மறைத்திட வேண்டும்.தனிநபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திட வேண்டும். அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் ,புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைத்திட வேண்டும். அரசு விருந்தினர் மாளிகைகளில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அனுமதிக்கப்பட கூடாது. தினசரி மது வகைகள் விற்பனை தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.