மேலும் செய்திகள்
கைலாசநாதர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
24-May-2025
நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் திருவிழாவில் நடந்த பூ பல்லக்கில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் நகர்வலம் வர திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இக் கோயில் வைகாசி திருவிழா மே 31-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடந்தது. ஜூன் 7-ல் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம், 8-ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பால்லக்கில் கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
24-May-2025