மாரியம்மன் கோயிலில் பூக்குழி
வேடசந்துார் : வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் வருடாந்திர விழாவை முன்னிட்டு கரகம் பாலித்தல், முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை 6:30 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிலர் தங்களது குழந்தைகளை துாக்கிக் கொண்டு இறங்கினர்.