உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கசவனம்பட்டியில் குருபூஜை விழா குவிந்த வெளிமாநில சாதுக்கள்

கசவனம்பட்டியில் குருபூஜை விழா குவிந்த வெளிமாநில சாதுக்கள்

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை விழாவில், ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றனர். கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது.. இந்தாண்டிற்கான விழா, குரு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள், பாண்டியன் கிணறு, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, காசி, சதுரகிரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த, பால் கலச ஊர் விளையாடல் நடந்தது. தீர்த்தாபிஷேகத்துடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை உலக நன்மைக்காக மகா யாகம் நடத்தப்பட்டது. ஆயிரத்து 8 படி பாலாபிஷேகம், திரவிய அபிஷேகத்துடன் பழங்கள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவார பாராயணம், திருவாசக முற்றோதலுடன் குருபூஜை நடந்தது. சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடந்தது. மும்பை, காசி, பத்ரிநாத் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை