உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

வேடசந்துார்: நவாமரத்துப்பட்டியில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி பலியானார்.நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மில் தொழிலாளி செந்தில்குமார் 40. இவரது மனைவி கிருஷ்ணவேணி 35, சல்லைய கவுண்டனுார் அரசு துவக்க பள்ளியில் பணிபுரிகிறார். இவர்களது மகள் கவிமதி 6. வேடசந்துார் தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்தார். நேற்று பெற்றோர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி தரைமட்ட தொட்டியில், தவறி விழுந்து இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை