உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குட்டுப்பட்டி உச்சி காளியம்மன் கோயிலில் ஆடுகள், கோழிகள் பலியிட்டு அன்னதானம்

குட்டுப்பட்டி உச்சி காளியம்மன் கோயிலில் ஆடுகள், கோழிகள் பலியிட்டு அன்னதானம்

நத்தம் : குட்டுப்பட்டியில் உச்சிகாளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திகடனாக கொடுத்த 10 -க்கு மேற்பட்ட ஆடுகள், 40 -க்கு மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு சுவாமிக்கு படையல் போடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை