வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் பகலில் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.77 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணாநகர் 2வது தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார்.அலைபேசி கடை வைத்துள்ளார். வீட்டை பூட்டி விட்டு மனைவி அனுசியாவுடன் கடைக்கு சென்றார். மதியம் 2:00 மணிக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை , ரூ.77 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.