திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ ஊர்வலம்
திண்டுக்கல் : தேர்தல் நேரத்தில் தி.மு.க., அரசு ஊழியர்க ளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஜாக்டோ- ஜியோ சார்பில் கோரிக்கை ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கிய இதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்தர், முருகன், ராஜாக்கிளி, ஜோசப் சேவியர், முபாரக் அலி, ஜெசி தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலர் மயில் தொடங்கி வைத்தார்.