உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி திருவிழா துவக்கம்

பழநி முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி திருவிழா துவக்கம்

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நாளை (நவ.,2 )கந்த சஷ்டி திருவிழா துவங்குகிறது.இக்கோயிலில் நாளை உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. மாலை சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பரப் புறப்பாடு நடக்கிறது. விழாவின் 6ம் நாளான நவ.,7 ல் மாலை சூரசம்ஹாரம், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடக்கும். பெரியநாயகி அம்மன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி முருகன் கோயிலிலிருந்து சின்ன குமாரசுவாமி, அடிவாரம் எழுந்தருள்வர். முருகன் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பராசக்தி வேல் திரு ஆவினன்குடி கோயிலில் வழிபாடு செய்யப்பட்டு கிரிவீதி வரும். அன்று கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடக்கிறது. நான்கு கிரி வீதியில் நான்கு சூரர்களை வதம் செய்ய சின்ன குமாரசுவாமி எழுந்தருள்வார். பின் இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடக்கும்.நவ.,8 திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம் நடக்கும். மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்து சுவாமி தங்க குதிரையில் திரு உலா நடந்தபின் பக்தர்கள் சஷ்டி விரதம் முடிப்பர். விழா நாட்களில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை