உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலில் நவ.2ல் கந்த சஷ்டி துவக்கம்: நவ .7ல் சூரசம்ஹாரம், நவ. 8ல் திருக்கல்யாணம்

பழநி முருகன் கோயிலில் நவ.2ல் கந்த சஷ்டி துவக்கம்: நவ .7ல் சூரசம்ஹாரம், நவ. 8ல் திருக்கல்யாணம்

பழநி: பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா நவ. 2ல் துவங்குகிறது. நவ. 7ல் சூரசம்ஹாரம், 8ல் திருக்கல்யாணம் நடக்கிறது.பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு கந்த சஷ்டி விழா நவ. 2ல் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஆறாம் நாளான நவ.7 ல் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதலுடன் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, சின்ன குமாரசுவாமி மலை அடிவாரம் எழுந்தருள மாலை 3:10 மணிக்கு கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம் செய்ய, இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறுகிறது. ஏழாம் நாளான நவ.8ல் முருகன்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம், அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க குதிரையில் வீதி உலா நடைபெறுவதோடு பக்தர்கள் சஷ்டி விரதத்தை முடிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை