தலைவர்கள் பிறந்தநாள் பேச்சு போட்டிகள்
திண்டுக்கல்: மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி , கல்லுாரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நவ. 13, நேரு பிறந்தாளை முன்னிட்டு நவ.14 ல் 6-12ம் வகுப்பு, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சுப்போட்டிகள் நடக்க உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணி முதல், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணி முதல் போட்டி நடக்க உள்ளன.