உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் அருகே மாரத்தான் போட்டி

நத்தம் அருகே மாரத்தான் போட்டி

நத்தம்; நத்தம்- துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கும்பச்சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மினிமாரத்தான் போட்டி நடந்தது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய மதுரை மண்டல தொழில்நுட்ப மேலாளர் அஜீத்குமார் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட களப்பொறியாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கும்பச்சாலை பகுதியில் தொடங்கிய மாரத்தான் 3 கி.மீ., தொலைவில் உள்ள கரையூர் பகுதியில் முடிந்தது. புதூர் பகுதி அரசு பள்ளியை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை