உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேத்துார் கோயில் விழாவில் மாவிளக்கு

சேத்துார் கோயில் விழாவில் மாவிளக்கு

செந்துறை: சேத்துார் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முத்தாலம்மன் ஊர்வலமாக வாணவேடிக்கைகளுடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் அக்னிசட்டி, அலகு , மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை