உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் 3 மணி நேரம் மிதமான மழை விடுதிகளில் முடங்கிய பயணிகள்

கொடை யில் 3 மணி நேரம் மிதமான மழை விடுதிகளில் முடங்கிய பயணிகள்

கொடைக்கானல்: - கொடைக்கானலில் நேற்று 3 மணி நேரம் மிதமான மழை பெய்ய மலை நகர் குளிர்ந்தது. சுற்றுலா நகரில் சில மாதமாக வறண்ட வானிலை நீடித்து வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. தொடர்ந்து மழையில்லாத நிலையில் அருவி, குடி நீர் ஆதாரங்கள் வற்றத் தொடங்கின. நகரில் வாரம் ஒருமுறை குடிநீர் சப்ளை உருவானது. அவ்வப்போது சாரல் மழை பெய்த போதும் பலனளிக்கவில்லை. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 2:00 மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கி 5:00 மணி வரை நீடித்தது. மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழையால் ஒணம் பண்டிக்கு வருகை தந்த பயணிகள் விடுதியில் முடங்கினர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி