உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாகேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிேஷகம்

நாகேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிேஷகம்

திண்டுக்கல்:திண்டுக்கல் - திருச்சி ரோடு என்.ஜி.ஓ.,காலனி நாகேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு மங்கள இசை, மஹா தீபாராதனை, 8:15 மணிக்கு மேல் கோ பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. 9:00 மணிக்கு மேல் நாகா மில் கமலகண்ணண், மகேஸ்வரி, சவுந்தர் கண்ணண், இயக்குனர் விஜய்ஆனந்த், ராம்பிரசாத் முன்னிலையில் கோயில் அர்ச்சகர்கள் நரசிம்ம பட்டர், கார்த்திக் அய்யர் தலைமையில் கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிேஷகம் நடை பெற்றது. அன்னதானம் நடந்தது. ஊர் முக்கியதஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ