உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி இடும்பன் மலை கட்டட பணிக்கு பொருட்களை கொண்டு செல்ல வின்ச்

பழநி இடும்பன் மலை கட்டட பணிக்கு பொருட்களை கொண்டு செல்ல வின்ச்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி இடும்பன் மலையில் பெருந்திட்ட வரைவு மூலம் கட்டப்படும் படிப்பாதை நிழல் மண்டபங்களுக்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல 'வின்ச்' அமைக்கும் பணி நடக்கிறது.பழநி முருகன் கோயில் அருகே இடும்பன் மலை உள்ளது. இங்கு 540 படிகள் உள்ளன. மலை மீது 13 அடி உயரம் கொண்ட இடும்பன் சிலை உள்ளது. விநாயகர், அகத்தியர், வள்ளி, தெய்வானை முருகனுடன் சிலைகளும் உள்ளன. தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில் பக்தர்கள் அதிகளவில் இங்கு சென்று வழிபடுகின்றனர்.தற்போது இங்கு பழநி கோயில் பெருந்திட்டவரைவு மூலம் படிப்பாதையில் ஐந்து நிழல் மண்டபங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.இதற்கான கட்டுமான பணிகளுக்கு பொருட்களை எடுத்து செல்ல சிரமம் உள்ளது. இதை தொடர்ந்து பொருட்களை எடுத்து செல்ல வசதியாக இடும்பன் மலையில் வின்ச் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது: வின்ச் மூலம் கட்டுமான பொருட்களை எளிதாக கொண்டு சென்று விரைவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்துடன் இடும்பன் மலைக்கு பழநி முருகன் கோயில் மலையில் இருந்து ரோப் கார் அமைக்கும் திட்டம் தனியாக செயல்படுகிறது. இதற்காக மத்திய அரசு நிறுவனம் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் திட்டத்திற்கான மதிப்பீடு வழங்கப்படும். மதிப்பீடு பெறப்பட்ட பின் அதற்கான பணி தமிழக அரசிடம் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை