வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை அருமை, வாழ்த்துக்கள், வாழ்க...வளர்க...
பழநி:பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஓவியாஞ்சலி, 600 க்கு 599 மார்க் பெற்றுள்ளார். பழநி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் - சாந்தி தம்பதியின் மகள் ஓவியாஞ்சலி. இவரது தந்தை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கணக்காளராகவும், தாய் பழநி ஒன்றிய அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர்.பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓவியாஞ்சலி படித்தார். பிளஸ் 2 தேர்வில் இவர் 600 க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், வணிகவியல் பொருளியல், கணக்கியல் கணினி பயன்பாடு, தமிழ் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். மாணவியை, பள்ளிச் செயலர் குப்புசாமி, நிர்வாக அலுவலர் சிவக்குமார், முதல்வர் கதிரவன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவர்கள் பாராட்டினர்.ஓவியாஞ்சலி கூறியதாவது : 10, 11, பொது தேர்வுகளிலும் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர்கள், பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். சமூக வலைதளத்தில் கால விரயம் செய்வது கிடையாது. வங்கி அதிகாரியாக ஆசைப்படுகிறேன். இளங்கலை பட்டப் படிப்பை முடித்த பிறகு போட்டித் தேர்வுகளில் பங்கேற்றக உள்ளேன், என்றார்.
அருமை அருமை, வாழ்த்துக்கள், வாழ்க...வளர்க...