உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளை துவக்கம்

 பழநி கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளை துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை (நவ. 27) காப்பு கட்டுதல் உடன் துவங்கி டிச. 3 வரை நடக்கிறது. பழநி முருகன் கோயிலில் நாளை (நவ. 27) மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீப திருவிழா துவங்குகிறது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்னகுமாரசுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெறும். டிச. 2 மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்ற சண்முகர் அர்ச்சனை, டிச. 3 மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை ,மாலை 4:00 மணிக்கு சாய்ரட்சை பூஜை நடைபெறுகிறது. 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள முருகன் கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்றப்படுகிறது. அதன் பின் 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். திருகார்த்திகை முன்னிட்டு டிச. 3 ல் தங்கரத புறப்பாடு நடைபெறாது. இதுபோல் அன்று திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலிலும் திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ