மேலும் செய்திகள்
பழநி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
06-Apr-2025
பழநி:பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் நேற் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்குனி உத்திர திருவிழா பழநி முருகன் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திரு ஆவினன்குடி கோயிலில் ஏப். 5 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது . தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று மாலை 6:45மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி யாகத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் சுவாமி- வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் ,சிறப்பு தீபாராதனை, இரவு சன்னதிவீதி, கிரி வீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடந்தது. இன்று மதியம் 12:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.14 இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி நேற்று முதல் ஏப். 14 வரை தங்கரத புறப்பாடு நடைபெறாது.
06-Apr-2025