வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெயரளவில் திட்டங்கள், மாடல் அரசு, ரிசல்ட் ஏமாற்றமே. மக்களுக்கு புரிந்தால் சரி.
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் முன்னர் டவுன் பஸ்கள் நின்று செல்லும் பெரும்பாலான இடங்களில் கான்கிரீட் கட்டுமானத்திலான நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நான்கு வழிச்சாலை பணியில் நிழற்குடைகள் இடிக்கப்பட்டு தற்போது பல கி.மீ., துார இடைவெளியில் ஒருசில இடங்களில் மட்டுமே தகர சீட்டுகள் பயணியர் நிழற்குடைகளாக மாற்றப்பட்டுள்ளன. திருச்சி நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் தங்கம்மாபட்டி, அய்யலுார், கொல்லப்பட்டி, ஆண்டிமாநகர், டி.என்.பாரைப்பட்டி பிரிவு, தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, மா.மூ.கோவிலுார் பிரிவு ஆகிய 8 இடங்களில் மட்டுமே பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் டவுன் பஸ்கள் ஒதுங்கி நின்று செல்ல வசதியாக ஒதுங்குதளம் (பஸ் பே) அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுத்தங்கள் தவிர திருச்சி ரோட்டில் மட்டும் நிழற்குடைகள் , 'பஸ் பே' இல்லாமல் 15 டவுன் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதே நிலை தான் மதுரை, நத்தம், பழநி, கரூர் ரோடுகளிலும் உள்ளது. இங்கெல்லாம் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்க எந்த வசதியும் இல்லை. இவ்விடங்களில் பஸ்கள் ரோட்டிலே நின்று செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. விபத்துக்கள் நடந்த விதம் காரணம் குறித்து ஆய்வு செய்தால் 'பஸ் பே' இல்லாததால் ஏற்பட்டவை அதிகம் என்பதை கண்டறியலாம். இனியும் அலட்சியம் செய்யாமல் எல்லா பஸ் நிறுத்தங்களிலும் நிழற்குடைகள், 'பஸ் பே' வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயரளவில் திட்டங்கள், மாடல் அரசு, ரிசல்ட் ஏமாற்றமே. மக்களுக்கு புரிந்தால் சரி.