ஓய்வூதியர்கள் மனித சங்கிலி..
திண்டுக்கல்: 8வது ஊதிய குழு அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அமைப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் ஜான் போர்ஜியா பேசினார்.