மனு கொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல் : டாக்டர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வுக்கு ஒரு வருட விதி தளர்த்துவது தொடர்பாக தமிழக அரசு டாக்டர்கள் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதம் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர். அதன்படி திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் மனு கொடுத்த னர்.