போலீஸ் செய்திகள் ... துாங்கியவரை எழுப்பி கத்திகுத்து
குஜிலியம்பாறை :கரிக்காலி பிரபகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் 42. குடியிருந்த வீடு சேதமானதால் அதை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதில் இவருக்கும் அருகில் உள்ள அண்ணாதுரை குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட ஊரில் பைசல் பேசியும் முடியவில்லை.இந்நிலையில் லாரி செட்டில் இரவில் துாங்கிக் கொண்டிருந்த மகேந்திரனை, அண்ணாதுரை மகன் வேல்முருகன் எழுப்பி கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் வர வேல்முருகன் தப்பினார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.