மேலும் செய்திகள்
மழையால் உயர்ந்தது தக்காளி விலை
02-Dec-2024
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அவரை ,சுரைக்காய் விலை அதிகரித்துள்ளது.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களில் அவரைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி சுற்றிய கிராமங்களில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களாக வரத்து அதிகமாக இருந்ததால் அவரைக்காய் ,சுரைக்காய் விலை சற்று குறைந்து கிலோ அவரைக்காய் ரூ.45 , சுரைக்காய் ரூ.8 க்கு விற்பனை ஆனது.இந்நிலையில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக விளைச்சல் பாதிக்க வரத்து குறைந்தது .இதனால் சுரைக்காய் கிலோ ரூ.2 அதிகரித்து ரூ.10 , அவரைக்காய் ரூ. 5 அதிகரித்து ரூ. 50க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
02-Dec-2024