கொடை யில் சாரல் மழை
கொடைக்கானல்: கொடைக்கானலில் வறண்ட வானிலைக்கு இடையே லேசான சாரல் மழை பெய்தது. வங்க கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானலில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்து பனியின் தாக்கம் அதிகரித்திருந்தது. நேற்று மாலை அரை மணி நேரம் லேசான சாரல் மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் தற்போதைய சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.