புதுப்பட்டியில் ரோடு மறியல்
வடமதுரை : புதுப்பட்டியில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சரிவர சப்ளை கிடைக்காத பிரச்னை சில வாரங்களாக உள்ளது. புகார் தெரிவித்தும் சீரமைப்பு பணி தாமதமான நிலையில் விரக்தியடைந்த மக்கள் அய்யலுார் பாலவிடுதி ரோட்டில் மறியல் செய்தனர். போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் விரைவில் சரி செய்யப்படும் என கூற மறியலை கைவிட்டனர்.