உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.1.50 கோடி கையாடல்

ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.1.50 கோடி கையாடல்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஆர்.எம்., காலனியில், ஆடிட்டர் ஹிதாயத்துல்லா அலுவலக உதவியாளராக மங்களபுரத்தை சேர்ந்த அனிஷா டெய்சி, 30, பணிபுரிந்தார். இவர், 2021 -- 2024 வரை அலுவலகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களிடம், வரி தாக்கல் செய்ய பணம் பெற்றுக்கொண்டு, அலுவலக கணக்கில் வரவு வைக்காமல், தன் கணவர் விவேக்நாத், 33, தந்தை மரிய பிரான்சிஸ் சேவியர், தாய் எமல்டா மேரி, முள்ளிப்பள்ளம் வேளாண் உதவி அலுவலராக பணிபுரியும் தங்கை விக்டோரியா செலஸ் ஆகியோரது கணக்கில் வரவு வைத்தார். ஆடிட்டர் தணிக்கை செய்த போது, 2021 முதல், 2024 வரை நடந்த பணபரிவர்த்தனைகளில், 1 கோடியே 55 லட்சம் ரூபாயை அனிஷா டெய்சி கையாடல் செய்தது தெரிந்தது. எஸ்.பி., பிரதீப்நடத்திய விசாரணையில், கையாடல் பணத்தில் அனிஷா டெய்சி, அவரின் குடும்பத்தார், வீடு, நிலம் வாங்கி சொகுசாக வாழ்ந்தது தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார், விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுத்த நிலையில் அனைவரும் தலை மறைவாகினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி