பள்ளி நுாற்றாண்டு விழா
நத்தம்: சமுத்திராபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம் தலைமை வகித்தார். ஆறுமுகம், துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், வட்டார கல்வி அலுவலர்கள் முருகேசன், எஸ்தர்ராஜம், தலைமை ஆசிரியர்கள் சாரா,புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார். கொடிமரம் அமைத்தல், மரக்கன்றுகள் வழங்குதல் நடந்தது.