வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அடிமாட்டு விலைக்கு தரலேன்னா யாரும் வாங்க மாட்டாங்க. ஒரு பாக்கெட் மிக்சர் 10 ரூவாய். அதில் ஒண்ணு வித்தா 2,3 ரூவா லாபம் கிடைக்கும். ஒரு பாக்கெட்டை காலாவதின்னு தூக்கி போட்டா 7 ரூவா நஷ்டம். யாரு குடுப்பா? இதுக்கு பேசாம ஆய்வுக்கு வரும் அதிகாரிக்கு அஞ்சோ, பத்தோ வெட்டினா கமுக்கமாப் போயிடுவான். எங்கேயோ எப்பவோ ஒரு பையன் காலாவதி குளிர்பானம் குடிச்சு செத்தா ஆய்வு செய்யறோம்னு சொல்லி நாலஞ்சு நாள் கடைக்கு சீல் வெச்சிட்டு பிறகு பிசினஸ் மாமூலா நடக்கும். யாரும் மாட்ட மாட்டாங்க. ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கு. உடுங்க. இதுதான் களநிலவரம்.
நெடுஞ்சாலை உணவகங்களின் அருகே உள்ள கடைகளில் காலாவதியான மற்றும் போலி பிராண்ட் விற்பனை சக்கைபோடு போடுகிறது குறிப்பாக அரசு விரைவு பேருந்து நிறுத்தும் இடங்களில் இது மிக மிக மிக அதிகம் கரெக்ட் ஆக மாமூல் வந்துவிடுவதால் அதிகாரிகள் கப்சிப். கழிவறை பராமரிப்பு இல்லை சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் அதிகாரிகள் குடும்பத்துடன் மீளாநரகம்போவார்கள்
இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.நல்லா சொன்னீங்க. தங்கள் பணிகளை செய்தாலே போறும். kannan