மேலும் செய்திகள்
ரயிலில் கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்
11-Aug-2025
திண்டுக்கல்: கர்நாடக மாநிலம் காச்சிக்குடா - மதுரை இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் திண்டுக் கல் வந்த போது இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின்னால் உள்ள பொதுப்பெட்டியில் கேட் பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்ததில் பண்டல், பண்டலாக 2.800 கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா புகையிலைப்பொருட்கள் இருந்தன. அவற்றை கடத்தி செல்வதும் தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிலும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். அவற்றை கடத்தியவர்களை முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி தேடி வருகின்றனர்.
11-Aug-2025