கோயில் விழாவில் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு
வத்தலக்குண்டு : காந்திநகரில் சோணை கருப்பணசுவாமி, வீரசின்னம்மாள் கோயில் ஆடிப் பெருக்கு திருவிழா நடந்தது. மஞ்சளாற்றில் கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வர சோணை கருப்பணசுவாமி கோயிலில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து பூஜாரிக்கு கருப்பண்ணசுவாமி அருள் வர அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.