உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறுவட்ட போட்டிகளில் சாதித்த எரியோடு மாணவர்கள்

குறுவட்ட போட்டிகளில் சாதித்த எரியோடு மாணவர்கள்

எரியோடு, ஆக.15- பழநி கல்வி மாவட்டம் ‘டி’ மண்டல அளவில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஒரு மாதமாக நடந்தது. இதில் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் 100 மீ, 200 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், இருமுறை தாண்டுதல், குண்டு எறிதல், 800 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். அதேபோல் ஆண்கள் பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், கடற்கரை கையுந்து பந்து, சிலம்ப போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், சந்திரா, போஸ், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி