உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலர் மீன் வாங்க கோவை சென்ற மாணவர்கள் மீட்பு

கலர் மீன் வாங்க கோவை சென்ற மாணவர்கள் மீட்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையைச் சேர்ந்த 12, 13 வயது 7ம் வகுப்பு மாணவர்கள் இருவர் வீடு திரும் பாததால் குஜிலியம்பாறை போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அலைபேசி எண் கோவை லொகேஷன் காட்ட திருப்பூர், கோவை போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாப்பில் நின்ற இருவரையும் கோவை போலீசார் மீட்டு குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி பெற்றோர் சென்று மீட்டு வந்தனர். விசாரணையில் கோவையில் கலர் மீன்கள் கிடைக்கும் என்பதால் அங்கு சென்றோம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை