பக்தர்களுக்கு சுக்கு காபி
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் யானை, படிப்பாதைகளில் நடந்து மேலே ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்வர். இவர்களுக்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் மோர், சுக்கு காபி கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் நேற்று முதல் சுக்கு காபியை பக்தர்களுக்கு இலவசமாக வழங்க தொடங்கியுள்ளது.