கோடை கேரம் பயிற்சி முகாம்
திண்டுக்கல் : மாவட்ட கேரம் சங்கம், ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாம் மே 5 ல் தொடங்கியது. 15 நாட்கள் நடந்த இம்முகாவில் 30 மாணவர்கள் பயற்சி பெற்றனர். மாவட்ட கேரம் சங்க செயலர் ஆல்வின்செல்வகுமார், பெருளாளர் மருதமுத்து, இணைச்செயலர் ஜெஸ்பர்செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் சசிபாலா வழிநடத்தினர். 3 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வென்றோருக்கான பரிசளிப்பு, முகாம் நிறைவு விழா நடந்தது. பள்ளி முதல்வர் கோமகள் பரிசு வழங்கினார்.