தமிழ் பெயர்ப்பலகை விழிப்புணர்வு
திண்டுக்கல்; அனைத்துக் கடைகள் , வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சபையின் சார்பில் அனைத்து வணிக சங்க பிரதிநிதிகளின் முன்னிலையில் நடந்தது. தொழிலாளர் உதவி கமிஷனர் மலர்கொடி பேசினார். திண்டுக்கல் நகர் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி கமிஷனர் கூறியதாவது : மே 15 க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.