உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்

புத்தகத் திருவிழாவில் ஆசிரியர் தின கருத்தரங்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், இலக்கிய களம் சார்பில் 12 -வது புத்தத்திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. 9 ம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. 11:30 மணிக்கு நடந்த மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையில் ஓவியப்பயிற்சி ,மதியம் சிலம்பம் விளையாட்டு நடந்தது. மாலை 5:00 மணிக்கு செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எப்.எஸ்., பதின்மப்பள்ளி, திண்டுக்கல் மாநகராட்சி நினைவு மேல்நிலைப்பள்ளி, செவாலியர் பதின்மப்பள்ளி, வர்மானியா சிலம்பம், ஆசாரி புதுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு நடந்த சிந்தனையரங்க நிகழ்வில் மார்க்சிஸ்ட் மதுரை எம்.பி., வெங்கடேஷன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை