வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தமிழ் நாட்டைவிட மற்ற மாநிலங்கள் முன்னேறிவிட்டது என தாங்கள் நினைத்தால் ஹிந்தி கற்பதில் எந்த முறன்பாடுமில்லை. ஆனால் எந்த ஒரு மொழிக்கு சரியான வரலாறு தமிழை விட இல்லையோ அதனை கற்றதனால் என்ன பயன்?
மூன்றாவது மொழி என்ற ஒன்று இங்கு தேவை இல்லை. அவரவருக்கு என்ன மொழி கற்க வேண்டுமோ அதை யார் வேண்டுமானாலும் தனியாக கற்றுக்கொள்ளலாம். அதை யாரும் இங்கு தடுக்க வில்லை. இட் கம்பனிகள் இங்கு இந்தியில் இயங்குகின்றது. அதிகப்படியான பன்னாட்டு கம்பனிகளில். ஹிந்தி ஆதிக்கம் செலுத்துகிறதா. இந்திய மொழிகளில் தொண்மையானது தமிழ். அதை அனைத்து மாநிலஙகளிலுளும் அமல் படுத்துங்கள்.
மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்வது எதிர்க்காலத்தில் எந்த பயனையும் தரப்போவதில்லை.மாறாக,தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப் போகிறது.மூன்றாவது மொழியின் மோகத்தால் தமிழ் மாணவர்கள் தாய்மொழியாம் தமிழை புறக்கணிக்கும் நிலை வரலாம். மேலும் மும்மொழிக்கல்விக்கொள்கையினால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்க்குலையலாம்..
நான் தமிழ்வழிக் கல்வி முறையில் தான் படித்தேன். வட இந்தியாவில் பணி புரிந்து வருகிறேன். நான் இங்கு வந்த பிறகு தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன். ஒரு மொழியை தேவையெனில் கற்றுக் கொள்வது உத்தமம். மூன்றாவது மொழி தேவையில்லாத சுமையைக் கொடுக்கும். மற்றபடி இது அரசியல் ஆதாயத்துக்காக ஏற்படுத்தப்படும் பிரச்சினை. முதலில் ஆங்கிலத்தை ஒழுங்காக கற்றுக் கொடுங்கள்.
மூன்றாவது மொழி கற்பது நல்லது தான்... தென் இந்தியாவில் ஹிந்தியைக் கற்கச் சொல்வதைப் போல வட இந்தியாவில் தமிழைப் பாடமாக அவர்களின் பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்க சொல்லுங்கள்... பாவம் இங்கே வேலைக்கு வரும் வட இந்தியர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்... தமிழகத்தில் இரண்டாவது மொழிக்கே அல்லல் படுகிறோம்.... மனம் தொட்டு சொல்லுங்கள் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.... மதிப்பெண்களுக்குமட்டுமே அந்த மொழியை படிக்கிறோம்.... மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் கூட அவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுவாரா என்றால் சந்தேகம் தான்....
மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டியது தான். அதுக்காக இப்படியா. . இப்போது அண்ணாமலைக்கும். .
எனக்கு தேவை இருந்தால் இந்தி கத்துக்க போறேன்... இந்தி இங்க கத்துகிட்டா மட்டும் போதாது தம்பி... பேச பேச தான் எந்த ஒரு மொழியும் கத்துக்க முடியும்... ஒரு வேளை வடக்கன் பக்கம் போனால் அங்க போய் கத்துக்குறேன்.. அப்றம் எவனோ இந்தி தெரியலனா கேவலமா இருக்குனு சொன்னானே, அவ்ளோ கேவலமா இருந்தா போ.... பொழைக்க வந்தவன் இங்க அழகாக தமிழ் பேசுறான் அவனுக்கு தேவைன்ன அவன் தான் மொழி கத்துக்கணும் ... நீயும் அங்க போய் பொளைக்க போரன்ன நீ அங்க போய் பேசி பேசி கத்துக்க... இந்தி காரன் எல்லாரும் தமிழ் கத்துகிட்டு தான் இங்க பாணி பூரி விக்குறான்னா....
அருமையாக சொன்னீர்கள்
நீ இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான். இங்கே எல்லா இடங்களிலும் அவங்க தான் வேலை செய்யப் போறாங்க இன்னும் சில வருடங்களில். அப்போது தான் உன் புத்திக்கு உரைக்கும்
தட்சிணா பிரசாத் சபாவில் படிக்கட்டுமே யார் வேணாம் என்று சொன்னாங்க
மொழி கற்பதில் எந்த தவறும் இல்லை.தடுப்பதே தவறு.
தாங்கள் ஆசிரியராக இருந்து பேசலாம்.. அன்றாட மக்களைப் பற்றி கொஞ்சம் யோசிக்கணும்.. ஏன் நம்ம தமிழ்நாட்டுக்காரர்கள் அங்க இல்லாமையா இருக்காங்க..?. முதல்ல அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பான்?