பல் இளிக்கும் பாதாள சாக்கடை... பயமுறுத்தும் மேன்ேஹால்கள்
திண்டுக்கல்லில் பாதாளசாக்கடை திட்டம் 2014ல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஆங்காங்கு மேன்ஹோல்கள் சேதமாக கழிவு நீரானது ரோட்டில் பாய்வது இன்றும் தொடர்கிறது .சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் பாதாள சாக்கடை கழிவு நீர் செல்கிறது. இதன் கழிவு நீர் தெருக்களில் குளம்போல் தேங்கி குடியிருப்போருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக புகார்கள் சென்றாலும் நடவடிக்கைகளில் தொய்வே ஏற்படுகிறது.இதன் காரணமாக குடியிருப்போர் பாதிக்கும் நிலையும் தொடர்கிறது.