உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கோயில்களில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு, கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள் ,பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.இதேபோல் திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில் கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.கொடைக்கானல் : கொடைக்கானல் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிஷேகம், தீபராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலிலும் விழா விமரிசையாக நடந்தது.சின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்துது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராமர் கோயில் கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை