வடமதுரையில் வருடாபிஷேக விழா
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. புனித ஸ்தலங்களில் இருந்து புனித நீர் கலசங்கள் வைத்து புன்யாவஜனம், அக்னி பிரதிஷ்னை, மகாலட்சுமி, லட்சுமிநரசிம்மர், பஞ்ச கந்த, சாந்தி யாக பூஜை , இரவு திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா நடந்தது. அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தினர். ஏற்பாட்டினை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் என்.பத்மநாபன், ரியல் எஸ்டேட் பிரமுகர் என்.ஆர்.ஏ. முரளிராஜன் செய்திருந்தனர்.