பாதயாத்திரை பாதையை சுத்தம் செய்த பேரூராட்சி
ஆயக்குடி: பழநி ஆயக்குடி ரயில்வே கேட் அருகே பாதயாத்திரை தனி பாதையில் புதர் மண்டியுள்ள இடத்தை ஆயக்குடி பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது பாதயாத்திரை பக்தர்களின் பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள பாதயாத்திரை பக்தர்களின் தனி பாதையை ஆயக்குடி பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.